
சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண் மற்றும் பெண் கிரிக்கெட் அணிகளை அனுப்பி வைக்கின்றன. ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர் கிரிக்கெட் தொடர் டி20 வடிவத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இன்று நடைபெற்று முடிந்த முதலாவது அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி வங்கதேச அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதையடுத்து இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.
அணியின் தொடக்க விராங்கனை அமீன் 3 ரன்களுக்கும், ஷவால் சுல்ஃபிகர் 16 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஒமைமா சொஹைல் 10, முனீபா அலி 13, கேப்டன் நிதா தார் 9, அலியா ரியாஸ் 2, நடாலியா 8, உம் இ ஹனி 9, நஷரா சந்து என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.