
Sri Lanka Thrash Pakistan By 23 Runs To Claim Asia Cup 2022 Title (Image Source: Google)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 15ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்தது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், தசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் டாஸ் வென்று பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
அணியின் நட்சத்திர வீரர் குசால் மெண்டிஸ் ரன் ஏதுமின்றி நசீம் ஷா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய பதும் நிஷங்கா, குணத்திலகா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.