ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு; ஷஃபாலி வர்மா நீக்கம்!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

இந்திய மகளிர் அணி சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இந்திய மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியதுடன், ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதனையடுத்து இந்திய மகளிர் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரின் முதல் போட்டி டிசம்பர் 5ஆம் தேதி பிரிஸ்பேனிலும், இரண்டாவது போட்டி டிசம்பர் 8 பிரிஸ்பேனிலும், மூன்றாவது போட்டி டிசம்பர் 11ஆம் தேதி பெர்த் கிரிகெட் மைதானத்திலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய மகளிர் அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இதில் அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுரும், துணைக்கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் தொடர்கின்றனர். அதேசமயம் நடந்து முடிந்த மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சோபிக்க தவறிய அதிரடி தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா இத்தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மேற்கொண்டு நியூசிலாந்து தொடரின் போது அறிமுகமான இளம் வீராங்கனைகள் தேஜல் ஹசாப்னிஸ், சைமா தாகூர் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், காயத்தில் இருந்து மீண்டுள்ள ஹர்லீன் தியோலும் தனது இடத்தை பிடித்துள்ளார். இவர்களைத் தவிர்த்து அணியின் நட்சத்திர வீரர்கள் ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், ரேனுகா சிங், தீப்தி சர்மா, யஷ்திகா பாட்டியா உள்ளிடோரும் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர்.
Also Read: Funding To Save Test Cricket
இந்திய மகளிர் அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (கேட்ச்), ஸ்மிருதி மந்தனா (விசி), பிரியா புனியா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், தேஜல் ஹசாப்னிஸ், தீப்தி சர்மா, மின்னு மணி, பிரியா மிஸ்ரா, ராதா யாதவ், டைட்டாஸ் சாது, அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்கூர், சைமா தாகூர்
Win Big, Make Your Cricket Tales Now