
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள மொயீன் அலி, இங்கிலாந்து அணிக்காக வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்களில் மட்டுமே விளையாடி வருகிறார். இவர் தற்போது வங்கதேச அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வந்தார். இதையடுத்து இந்தியாவில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடவுள்ளார்.
இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “எனக்குப் பல லட்சியங்கள் கிடையாது. ஆனால் உலகக் கோப்பைப் போட்டிக்கான அணியில் இடம்பெறவும் கோப்பையை வெல்லவும் விரும்புகிறேன். அதன்பிறகு பார்க்கலாம். இதனால் நான் ஓய்வு பெறுவேன் என்றோ ஓய்வு பெற மாட்டேன் என்றோ கூறவில்லை. 35 வயதில் அடுத்த ஏழு, எட்டு மாதங்கள் என்பதே மிகப் பெரியது. ஏதாவது ஒரு சமயத்தில் இது போதும் என நான் நினைக்கலாம்.