
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதனால் இத்தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலியா அரையிறுதிச்சுற்றுடன் வெளியேறியது. இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அந்த அணியின் நட்சத்திர வீரரும், நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியை கேப்டனாக வழிநடத்தியவருமான ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியளித்துள்ளார்.
சர்வதேச அரங்கில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருந்து வரும் ஸ்டீவ் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருப்பது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் நேற்றைய போட்டியிலும் கூட சிறப்பாக செயல்பட்டிருந்த ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் கடந்ததுடன் 73 ரன்களைச் சேர்த்து அணியை வலுவான நிலைக்கு அழைத்து சென்றிருந்தார். இப்படியான நிலையில் அவர் திடீரென ஓய்வை அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.
Steve Smith#Australia #Cricket #India #SteveSmith pic.twitter.com/0ro5g802WZ
— CRICKETNMORE (@cricketnmore) March 5, 2025