
Stuart Broad Picks Combined paying XI: ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடர் 2-2 என டிராவில் முடிந்த நிலையில், முன்னாள் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் இரு அணிகளின் ஒருங்கிணைந்த பிளேயிங் லெவனை தேர்ந்தெடுத்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்துள்ளது. இதில் முதல் டெஸ்டில் இங்கிலாந்தும், இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியும் வெற்றிபெற்ற நிலையில் மூன்றாவது போட்டி டிராவானது. அதன்பின் 4ஆம் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், 5வது டெஸ்டில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன் தொடரையும் சமன்செய்து அசத்தியது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் இரு அணிகளின் ஒருகிணைந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார். அவர் தேர்ந்தெடுத்துள்ள இந்த அணியில் தொடக்க வீரர்களாக இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ரகுலை தேர்வு செய்துள்ளார். இதில் ஜெய்ஸ்வால் 411 ரன்கள் (சராசரி 41.10) மற்றும் ராகுல் 532 ரன்களை (சராசரி 53.20) எடுத்ததுடன், இருவரும் தலா 2 அரைசதங்கள் மற்றும் 2 சதங்களையும் விளாசியுள்ளனர்.