
இந்திய அணியின் இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான கேஎல் ராகுல் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரினை அடுத்து காயம் காரணமாக இந்திய அணியில் பல மாதங்களாக விளையாடாமல் இருந்தார். அதன் பின்னர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் கம்பேக் கொடுத்த அவர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரிலும் ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வருகிறார். ஆனால் சூப்பர் 12 சுற்றில் இதுவரை நடைபெற்று முடிந்த மூன்று ஆட்டங்களிலும் சேர்த்து ராகுல் வெறும் 22 ரன்களை மட்டுமே குவித்துள்ளார்.
இதனால் அவரை அணியிலிருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக ரிஷப் பந்தை கொண்டு வர வேண்டும் என்ற விமர்சனங்கள் அதிக அளவில் எழுந்துள்ளன. அதேபோன்று தொடர்ச்சியாக சொதப்பும் ராகுலை வெளியேற்றிவிட்டு அவருக்கு பதிலாக வேறு பேட்ஸ்மேனுடன் இந்திய அணி களமிறங்கலாம் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கேஎல் ராகுலின் இந்த நிலைமை குறித்து தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.