உலகக்கோப்பையை வெல்ல விராட் கோலி பசியுடன் உள்ளார் - சுனில் கவாஸ்கர்!
இந்தியாவில் நடைபெற இருக்கும் 2023ஆம் ஆண்டிற்கான ஐசிசி யின் ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வதில் விராட் கோலி முக்கிய பங்கு வைப்பார் என்று சுனில் கவாஸ்கர் அளித்துள்ள பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகக்கோப்பையை வெல்ல விராட் கோலி பசியுடன் உள்ளார் - சுனில் கவாஸ்கர்! (Image Source: Google)
இந்தியாவில் இந்தாண்டு அக்டோபர் 5ஆம் தேதி ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. அதன்பின் நேற்றைய தினம் அனைத்து அணிகளும் தங்களுடை உலகக்கோப்பை அணியை அரிவித்தனர்.
அதுமட்டுமின்றி அவரது ஆக்ரோஷமான அணுகுமுறை இந்திய அணியும் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றது. தற்போதுள்ள இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியிலும் விராட் கோலி சீனியர் வீரராக முன்னின்று சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஐசிசி கோப்பையை கைப்பற்றாமல் இருக்கும் இந்திய அணி இம்முறை ஒருநாள் உலகக் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை நேற்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்க்கர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் வெளியிட்டிருந்த வேளையில் இந்த உலகக் கோப்பை தொடரை வெல்வதில் விராட் கோலி முக்கிய பங்கினை வகிப்பார் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “விராட் கோலி இந்திய அணியில் இருப்பது அணியில் உள்ள வீரர்களுக்கு கூடுதலான உத்வேகத்தை தரும். ஏனெனில் விராட் கோலி ஏற்கனவே 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றுள்ளார். எனவே மீண்டும் ஒருமுறை இரண்டாவது முறையாக உலககோப்பையை வெல்லும் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்ற பசியுடன் காத்திருக்கிறார்.
அதோடு இந்த உலகக் கோப்பை தொடரில் அவர் ரன் குவிக்கும் பசியோடு இருப்பதாலும் இந்த உலகக் கோப்பை வெல்ல அவர் இளம் வீரர்களுக்கு ஒரு மோட்டிவேட்டராக இருப்பார். அவரது செயல்பாடு நிச்சயம் இந்திய அணி கோப்பையை வெல்ல உதவும்” என தெரிவிதுள்ளார்.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News