
டி20 உலக கோப்பையுடன் இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி விலகிவிட்டார். அடுத்தாக நடக்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய டி20 அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படவுள்ளார்.
விராட் கோலிக்கு பிறகு இந்திய டி20 அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா தான் நியமிக்கப்படுவார் என்பது தெரிந்த விஷயம் தான் என்றாலும், நீண்டகால கேப்டனுக்கான நபராக கேஎல் ராகுல் இருப்பார் என்பதால் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு அவரை கேப்டனாக நியமிக்கலாம் என்றெல்லாம் பேசப்பட்டது.
ஆனால் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன், இந்திய அணியை வெள்ளைப்பந்து போட்டிகளில் வழிநடத்த கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் சிறப்பாக பயன்படுத்தி அணியை அருமையாக வழிநடத்தி வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர் என்ற வகையிலும், கேப்டன்சி அனுபவத்தின் அடிப்படையிலும் ரோஹித் சர்மா தான் இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.