ஐபிஎல் 2025: சிறப்பு சாதனை படைக்க காத்திருக்கும் சுனில் நரைன்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணிக்கு எதிரான லீக் போட்டியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் சுனில் நரைன் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 18ஆவது சீசன் நாளை (மார்ச் 22) முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது.
இத்தொடரில் நாளை நடைபெறவுள்ள முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து, ராஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Trending
இரு அணிகளிலும் நட்சத்திர பட்டாளங்கள் உள்ளதால் இதில் எந்த அணி வெற்றியைப் பதிவுசெய்து தொடரை வெற்றியுடன் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் ஆர்சிபி அணிகு எதிரான இந்த போட்டியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் சுனில் நரைன் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
அதன்படி, ஐபிஎல்லில் தொடரில் சுனில் நரைன் 110 இன்னிங்ஸ்களில் 97 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இந்நிலையில் இப்போட்டியில் அவர் இன்னும் 3 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் அவர் தனது 100 சீக்ஸர்களை பூர்த்தி செய்வார். இதனை அவர் செய்யும் பட்சத்தில் ஐபிஎல் தொடர் வரலாற்றில் 100 சிக்ஸர்கள் மற்றும் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது மற்றும் முதல் வெளிநாட்டு வீரர் எனும் பெருமையை பெறவுள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
இதற்கு முன் இந்த தொடரில் இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா மட்டுமே ஐபிஎல் தொடரில் 150+ விக்கெட்டுகள் மற்றும் 100 சிக்ஸர்களுக்கு மேல் அடித்துள்ளார். அவர் இதுவரை ஐபிஎல் தொடரில் 160 விக்கெட்டுகளையும், 107 சிக்ஸர்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் சுனில் நரைனைப் பொறுத்தவரையில் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடி காட்டியுள்ள நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரிலும் அவர் அதனை தொடர்வார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Win Big, Make Your Cricket Tales Now