
தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடரின் இறுதிப்போட்டி ஜோஹன்னஸ்பர்கிலுள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் வெய்ன் பார்னெல் தலைமையிலான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி, ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி இந்த சீசன் முழுக்க அபாரமாக விளையாடி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறி, அரையிறுதியிலும் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு வந்த பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி இப்போட்டியில் பேட்டிங்கில் சொதப்பியது.
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஃபிலிப் சால்ட் 8 ரன்னுக்கு ஆட்டமிழக்க, மற்றொரு அதிரடி தொடக்க வீரரான குசால் மெண்டிஸும் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின்னர் டி பிருய்ன்(11), ரைலீ ரூசோ(19), காலின் இங்ராம்(17), ஜிம்மி நீஷம் (19) என அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.