அபார சதத்தின் மூலம் சாதனைகளை நிகழ்த்திய சூர்யகுமார் யாதவ்!
இலங்கை எதிரான 3ஆவது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 112 ரன்களை விளாசினார் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனைப் படைத்துள்ளார்.

கடந்த ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர், சர்வதேச டி20 தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த வீரர் போன்ற பெருமையை பெற்றவர் சூர்யகுமார் யாதவ். இதன் மூலம் , இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் என்ற அந்தஸ்து சூர்யகுமார் யாதவ்க்கு கிடைத்தது. தற்போது புத்தாண்டிலும் சூர்யகுமார் அதே ஃபார்மை தொடர்ந்தார்.
முதல் டி20 போட்டியில் 7 ரன்களில் ஆட்டமிழந்த சூர்யகுமார், 2ஆஅவது டி20 போட்டியில் அரைசதம் கடந்தார். தற்போது 3ஆவது டி20 போட்டியில் 45 பந்துகளில் சதம் விளாசினார்.
Trending
இது குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ், “கடந்த ஆண்டு விளையாடியது, கடந்த ஆண்டிலேயே போய்விட்டது. தற்போது புதிய ஆண்டு, மீண்டும் புதியதாக ரன் சேர்க்க வேண்டும். நான் கடந்த ஒரு ஆண்டாக எந்த ஷாட்களை விளையாடினேனோ, அதே ஷாட்டை தான் இன்றும் விளையாடினேன். என்னுடைய ஸ்பெஷல் ஷாட்களை தொடர்ந்து பயிற்சி செய்தேன். பந்துவீச்சாளர்கள் பந்தை வீசும் முன்னே, அதனை யூகித்து என்னுடைய ஷாட்டை தேர்வு செய்து ஆடுவேன்” என்று தெரிவித்தார்.
இந்த இன்னிங்ஸ் மூலம் டி20 கிரிக்கெட்டில் உலகத்திலேயே தொடக்க வீராகள் இல்லாமல் அதிகசதம் விளாசிய வீரர் என்ற சாதனையை சூர்யகுமார் படைத்திருக்கிறார். இதே போன்று குறைந்த இன்னிங்சில் டி20 கிரிக்கெட்டில் 3 சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் சூர்யகுமார் யாதவ் படைத்திருக்கிறார்.
மேலும் அதிக ஸ்ட்ரைக் ரெட் வைத்திருக்கும் வீரர், டி20 கிரிக்கெட்டில் அதிக முறை 110 ரன்களை தாண்டிய வீரர், ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த 2ஆவது இந்திய வீரர் போன்ற பல சாதனைகளை சூர்யகுமார் யாதவ் படைத்திருக்கிறார்.
Win Big, Make Your Cricket Tales Now