
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது பெங்களூரு நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மேத்யூ வேட் முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார்.
அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 53 ரன்களையும், அக்சர் பட்டேல் 31 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 161 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே குவித்ததால் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் அவர்கள் அடைந்த தோல்வியின் மூலம் இந்த தொடரில் மட்டும் நான்காவது தோல்வியை சந்தித்துள்ளார்கள். அதேவேளையில் இந்திய அணி இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.