
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது நெருங்கிவரும் சூழலில் அத்தொடரின் மீதானா எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், இதில் எந்த கோப்பையை வென்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அதன்படி நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. மேலும் இந்த அணியின் துணைக்கேப்டனாக ஹர்திக் பாண்டியாவே நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி அணியின் பேட்டர்கள் வரிசையில் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் தேர்வாளர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தி விக்கெட் கீப்பர்களுக்கான தேர்வில் நடப்பு ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் ரிஷப் பந்து ஓராண்டுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்கவுள்ளார்.