Advertisement

எளிய கேட்ச்சை தவறவிட்ட விராட் கோலி; அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் இந்திய வீரர் விராட் கோலி எளிதான கேட்ச் ஒன்றை தவறவிடும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan October 31, 2022 • 11:35 AM
T20 WC: Virat Kohli Drops A Loopy Catch, Ashwin And Cricket Fanatics Left In Shock
T20 WC: Virat Kohli Drops A Loopy Catch, Ashwin And Cricket Fanatics Left In Shock (Image Source: Google)
Advertisement

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 30ஆவது போட்டியில் இந்திய அணியும், தென் ஆப்ரிக்கா அணியும் மோதின. ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 68 ரன்கள் எடுத்து கொடுத்தார், மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் குவிக்கவில்லை. தென் ஆப்ரிக்கா அணி சார்பில் அதிகபட்சமாக லுங்கி நிகிடி 4 விக்கெட்டுகளையும், பர்னல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Trending


இதன்பின் 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு டி காக் , டெம்பா பவுமா, ருச்சோவ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுத்தனர். இதன்பின் கூட்டணி சேர்ந்த டேவிட் மில்லர் – மார்கர்ம் ஜோடி, இந்திய அணியின் பந்துவீச்சை இலகுவாக எதிர்கொண்டு தேவைக்கு ஏற்ப ரன்னும் சேர்த்தது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்கரம் 41 ரன்களில் 52 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். அஸ்வின் வீசிய போட்டியின் 18வது ஓவரில் டேவிட் மில்லர் 2 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம், கடைசி இரண்டு ஓவரில் 12 ரன்கள் தேவை என்ற நிலைக்கு தென் ஆப்ரிக்கா அணி வந்தது.

19ஆவது ஓவரை வீசிய முகமது ஷமி 6 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்ததால் கடைசி ஒரு ஓவருக்கு 6 ரன்கள் தேவை என்ற நிலையை தென் ஆப்ரிக்கா அணி அடைந்தது. வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் இக்கட்டான கடைசி ஓவரையும் கூலாக எதிர்கொண்ட டேவிட் மில்லர் அசால்டாக போட்டியை முடித்து கொடுத்தார். இதன் மூலம் தென் ஆப்ரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அர்ஸ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். புவனேஷ்வர் குமாரை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி சார்பாக டேவிட் மில்லர் மற்றும் மார்க்ரம் ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினர். இந்நிலையில் இந்திய அணி பெற்ற இந்த தோல்விக்கு இந்திய வீரர்களின் மோசமான ஃபீல்டிங் தான் காரணம் என இந்திய ரசிகர்கள் அனைவரும் சமூகவலைதளத்தில் இந்திய அணியை விமர்சித்து வருகின்றனர்.

ஏனெனில் இந்த போட்டியின் போது துவக்கத்திலேயே தென் ஆப்பிரிக்க அணி 24 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இந்நிலையில் அந்த தருணத்தில் மேலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தால் இந்திய அணியின் கை ஓங்கி இருக்கும் என்ற நிதர்சனமான நிலை இருந்த வேளையில் தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் கொடுத்த பல ரன் அவுட் வாய்ப்புகளை இந்திய வீரர்கள் தவறவிட்டனர்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

குறிப்பாக ரோஹித் சர்மா, சூரியகுமார் யாதவ் போன்றவர்கள் கூட ரன்அவுட் வாய்ப்பை தவறவிட்டனர். அதுமட்டும் இன்றி மிகச்சிறந்த பீல்டரான விராத் கோலி கூட எளிதான கேச்சை தவறவிட்டது அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு ஹார்டிக் பாண்டியா மற்றும் விராட் கோலி இணைந்தும் ஒரு கேட்சை தவறவிட்டனர்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement