-mdl.jpg)
T20 World Cup 2022: India restricted Pakistan by 159/8 (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. பிரதான சுற்றான சூப்பர் 12 சுற்று நேற்று தொடங்கியது. உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த இந்தியா - பாகிஸ்தான் லீக் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணி 2 சுழற்பந்துவீச்சாளர்கள், 4 வேகப்பந்துவீச்சாளர்கள் என 6 பௌலர்கள் உடன் இந்தியா களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கத்திலேயே அர்ஷ்தீப் சிங் மூலம் ஆபத்து காத்திருந்தது. அதன்படி கேப்டன் பாபர் ஆசாம் முதல் பந்திலேயேயும், முகமது ரிஸ்வான் 4 ரன்களிலும் அடுத்தடுத்து அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.