
டி20 உலக கோப்பை போட்டியில் நாளை நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. நடப்பு தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் ஐந்து போட்டிகளில் விளையாடி மொத்தமே 39 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இது பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த நிலையில் பாபர் ஆசாமை சாதாரணமாக நினைக்க வேண்டாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆலோசகர் மேத்யூ ஹைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹைடன், “நாம் அனைவருக்குமே தெரியும். ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்குமே அவர்களது வாழ்க்கையில் ஏற்ற, தாழ்வுகள் இருக்கும். அவர்களது பாதையில் சவால்களும் தடைகளும் நிறையவே இருக்கும். அதை நீங்கள் உடைக்கும் போது தான் உங்களுடைய மகிமை அனைவருக்கும் தெரியும். அப்படிதான் சிறந்த வீரர்கள் உருவாகி இருக்கிறார்கள்.
பாபர் ஆசாமிடம் அந்த மகிமை இருப்பது குறித்து எந்த சந்தேகமும் உங்களுக்கு வேண்டாம். அவர் நிச்சயம் சிறந்த வீரர்களுக்கு ஒரு படி மேலே இருப்பார். மக்கள், பாபர் ஆசாம் குறித்து பல கருத்துக்களை தெரிவிக்கலாம். ஆனால் அவர் அருகே இருக்கும் நபர்களுக்கு மட்டும் தான் பாபர் ஆசாமின் கிரிக்கெட் குறித்து தெரியும். கிரிக்கெட் நிச்சயம் கடினமான விளையாட்டு. நீங்கள் விளையாடும் அனைத்து போட்டிகளிலும் அரை சதமோ, சதமோ 140 ஸ்ட்ரைக் ரேட் என அடிக்க முடியாது.