டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று வங்கதேச அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. கடைசி பந்து வரை சென்ற இப்போட்டியில் மீண்டும் ஒரு த்ரில் வெற்றி கிடைத்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 184/6 ரன்களை குவித்தது. இதன்பின் ஆடிய வங்கதேசத்திற்கு மழையின் காரணமாக 16 ஓவர்களில் 151 ரன்கள் அடித்தால் போதும் என அறிவித்தனர். ஆனால் 145 ரன்களை மட்டுமே எடுத்து வங்கதேசம் தோற்றது.
இந்த போட்டியில் கடைசி ஓவர் த்ரில், மழை குறுக்கீடு, ஓவர்கள் குறைப்பு என பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறிய போதிலும், விராட் கோலி செய்த சம்பவங்கள் தான் பேசுப்பொருளாகியுள்ளது. அதாவது கோலி பேட்டிங் செய்த போது ஒரே ஓவரில் 2 பவுன்சர்கள் போடப்பட்டது. இதற்கு கோலி நோ பால் கேட்டவுடன் அம்பயர்களும் கொடுத்தனர். அப்போது வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசனுக்கும் கோலிக்கும் சிறிய பிரச்சினை ஏற்பட்டது.