-mdl.jpg)
டி20 உலக கோப்பை தொடருக்காக இந்திய அணி வரும் 17ஆம் தேதி பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. இந்த தொடருக்காக இந்திய அணி இரண்டு வாரம் முன்பே ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்று அங்கு மேற்கு ஆஸ்திரேலியா அணியுடன் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் தோல்வியை தழுவி வெளியேறியது. இதனால் இம்முறை இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேறும் என அனைவராலும் நம்பப்படுகிறது.
இதனிடையே, இந்திய அணி குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டி அளித்துள்ளார். அதில் “இந்திய அணியின் அங்கமாக கடந்த ஆறு ஏழு ஆண்டுகள் நான் இருக்கிறேன். முதலில் பயிற்சியாளராகவும் தற்போது வர்ணனையாளராகவும் செயல்பட்டு வருகிறேன். என்னை பொறுத்த வரைக்கும் டி20 போட்டிகளில் இந்தியா களமிறக்கும் சிறந்த அணி இதுவாக தான் இருக்கும்.