
எட்டாவது டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதின் குரூப் 1லிருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளும், குரூப் 2லிருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், இன்று சிட்னியில் நடைபெற்றுவரும் முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தும் பாகிஸ்தானும் மோதுகின்றன.
அதன்பின் இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கும் ஃபின் ஆலன், டெவான் கான்வே இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
பாகிஸ்தான் தரப்பில் முதல் ஓவரை வீசிய ஷாஹின் அஃப்ரிடி நியூசிலாந்து ரசிகர்களுக்கும் அதிர்ச்சிகொடுத்தார். நியூசிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் ஃபின் ஆலன் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஷாஹின் அஃப்ரிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.