Advertisement

மீண்டும் விளையாடிய மழை; ஆஸி -இங்கி போட்டியும் ரத்து - ரசிகர்கள் ஏமாற்றம்!

மெல்பர்னில் மழை பெய்துவருவதால் டி20 உலக கோப்பையில் ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையேயான போட்டி மழையால் ரத்தான நிலையில், ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான போட்டியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan October 28, 2022 • 16:17 PM
T20 World Cup: Group 1 Clash Between Australia and England Abandoned Due To Persistent rain
T20 World Cup: Group 1 Clash Between Australia and England Abandoned Due To Persistent rain (Image Source: Google)
Advertisement

டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், மழையால் சில போட்டிகள் ரத்தாவது சுவாரஸ்யத்தை குறைக்கிறது. தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே இடையேயான போட்டியில் தென் ஆப்பிரிக்கா ஜெயித்திருக்க வேண்டியது. ஆனால் மழை காரணமாக புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

அதன்பின்னர் ஆஃப்கானிஸ்தான் அணி ஆடவேண்டிய 2 போட்டிகள் ரத்தாகியுள்ளன. க்ரூப் 1-ல் இடம்பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு போட்டியில் மட்டுமே ஆடியது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் தோல்வியடைந்த நிலையில், நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் இடையேயான போட்டி மழையால் ரத்தானது.

Trending


இன்று மெல்பர்னில் மழை காரணமாக ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையேயான போட்டியும் ரத்தானது. ஆஃப்கானிஸ்தான் அணிக்கு கிரிக்கெட் ஆடும் கொடுப்பனையே இல்லை. 2 போட்டிகள் ரத்தாகியுள்ளது.

அந்த போட்டிக்கு பின் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான போட்டியும் மெல்பர்னில் நடக்கவேண்டியது. இந்திய நேரப்படி பிற்பகல் ஒரு மணிக்கு டாஸ் போட்டு ஒன்றரை மணிக்கு தொடங்கியிருக்க வேண்டிய போட்டியும் மழையால் தாமதமாகியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு அடுத்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையேயான போட்டிதான்.

இந்நிலையில், ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்களும் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement