
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை 2022 தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் 1இல் இருந்து சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. அதேபோல், குரூப் இரண்டில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா, பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன.
இதில் இன்று சிட்னியில் நடைபெறும் அரையிறுதியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளும், நாளை அடிலெய்டில் நடைபெறவுள்ள அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகளும் மோதவுள்ளன. இதில் வெற்றிபெறும் அணிகள் நவம்பர் 13ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் பங்கேற்கும்.
இந்த இறுதிப் போட்டிக்கு எந்தெந்த அணிகள் தகுதிபெறும் என்பது குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் சிலர் தங்களது கணிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். குறிப்பாக, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் ஆகியோர் இந்தியாவை, இங்கிலாந்து அசால்ட்டாக அடித்துவிடும் எனக் கூறி வருகிறார்கள். இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரோஹித் ஷர்மா பத்திரிகையாளர் சந்தப்பில் இன்று பேசியுள்ளார்.