
டி20 உலக கோப்பையில் இந்திய அணி தனது முதல் தோல்வியை அடைந்தது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின் 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி இரண்டு பந்துகள் எஞ்சிய நிலையில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் புள்ளி பட்டியலில் தென் ஆப்பிரிக்கா அணி முதலிடத்தை பிடித்தது. இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி அடுத்த இரண்டு போட்டிகளும் வெல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்திய அணி தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, “ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படும் என்று நாங்கள் முன்பே எதிர்பார்த்தோம். இரவு நேரத்தில் போட்டி தொடங்குவதால் ஆட்டத்தின் பிற்பகுதியில் பந்து நன்றாக ஸ்விங் ஆகும் என்று எங்களுக்கு தெரியும்.