
ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் 1-ல் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 அணிகளும், குரூப் 2-ல் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய 2 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
இந்த தொடரில் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக மதிப்பிடப்பட்ட இங்கிலாந்து, அதற்கேற்ப அருமையாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறியது. சூப்பர் 12 சுற்றில் முதல் 4 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய 4 அணிகளையும் வீழ்த்தி வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, தென்ஆப்பிரிக்காவிடம் தோற்றது.
ஆனாலும் நெட் ரன்ரேட் நன்றாக இருந்ததால் அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி. அபுதாபியில் வரும் 10ஆம் தேதி நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி. இந்நிலையில், அந்த அணியின் அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய், காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார்.