
டி20 உலகக் கோப்பை 2022 சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றின் இன்றைய லீக் போட்டியில் இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணியில் கேஎல் ராகுல் 50, விராட் கோலி 64, சூர்யகுமார் யாதவ் 30 ஆகியோர் அபாரமாக விளையாடி அசத்தினார்கள். இறுதியில் அஸ்வின் தனது பங்கிற்கு 13 ரன்களை சேர்த்ததால், இந்திய அணி 20 ஓவர்களில் 184/6 ரன்களை குவித்தது.
இலக்கை துரத்திக் களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் அபாரமாக விளையாடி 7 ஓவர்களிலேயே 59 ரன்களை சேர்த்த நிலையில், மற்றொரு ஓபனர் ஷான்டோ 7 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். இந்நிலையில், வங்கதேச அணி 7 ஓவர்களில் 66/0 ரன்களை சேர்த்திருந்தபோது மழை குறுக்கிட்டது.