
ஷார்ஜாவில் நேற்று நடந்த சூப்பர்-12 சுற்றில் குரூப்-1 பிரிவு ஆட்டத்தில் ஸ்காட்லாந்த அணியை 72 ரன்கள்வித்தியாசத்தில் தோற்கடித்தது பாகிஸ்தான் அணி.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் சேர்த்தது. 190 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் சேர்த்து 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் 15 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 5 ரன்களை ரிஸ்வான் சேர்த்தபோது, கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தகர்க்கமுடியாத கிறிஸ் கெயிலின் சாதனையை தகர்த்தார். 2015ஆம் ஆண்டில் கிறி்ஸ் கெயில், 36 டி20 போட்டிகளில், 1665 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் கெயில் 3 சதங்கள், 10 அரைசதங்களை அடித்திருந்தார்.