
ஐசிசியின் ஒன்பதாவது ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் ஆடின. கயானாவில் நடைபெற்ற இப்போட்டியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது.
ஆஃப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக குர்பாஸ் 80 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி, பவுல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து வெறும் 75 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 84 ரன் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றியின் ஆஃப்கான் அணி கேப்டன் ரஷித் கான், “எங்களின் கிரிக்கெட் வரலாற்றில் இது மிகப்பெரிய வெற்றி. குறிப்பாக பெரிய அணியான நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் இது எங்களின் சிறப்பான ஆட்டங்களில் ஒன்றாகும். இது ஒட்டுமொத்தமாக எங்கள் அணியைச் சேர்ந்த அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டதின் வெளிப்பாடு தான் இந்த வெற்றி ஆகும்.