Advertisement

தினேஷ், ரிஷப் விசயத்தில் என்ன நடக்கும் என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது - ரோஹித் சர்மா!

தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பந்த் விசயத்தில் நாங்கள் இன்னும் சரியான முடிவுகளை எடுக்கவில்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 09, 2022 • 11:40 AM
T20 World Cup: Pant, Karthik are in play for the semifinals, says Rohit Sharma
T20 World Cup: Pant, Karthik are in play for the semifinals, says Rohit Sharma (Image Source: Google)
Advertisement

டி20 உலக கோப்பை அரை இறுதி சுற்றில் இந்திய அணி பலம் வாய்ந்த இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி வியாழக்கிழமை இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டி20 உலக கோப்பை அரையிறுதி சுற்றில் விளையாடுகிறது. அதே போன்று டி20 உலககோப்பையில் இங்கிலாந்து அணியை 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா சந்திக்கிறது.

இந்த நிலையில் அடிலெய்ட் மைதானத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “அரையிறுதி போட்டி வரை வந்திருக்கிறோம் இப்போது எங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது நீண்ட பயணமாக இருந்தது. நாங்கள் என்ன செய்தோமோ, அதையே தான் திரும்பவும் செய்கிறோம். எந்த மாற்றமும் இல்லை, நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடினால் நிச்சயம் வெற்றி பெறுவோம். இன்னும் செல்ல வேண்டிய தூரம் இருக்கிறது.

Trending


தென் ஆபிரிக்காவுக்கு எதிரான தோல்வியை குறித்து எங்களை மதிப்பிட வேண்டாம். ஒரு மோசமான போட்டி எங்களை யார் என்று விவரிக்காது. நாங்கள் அரையிறுதி போட்டி வரை வந்திருப்பது பெருமையாக கருதுகிறேன். துபாய் போன்ற மைதானங்களில் பவுண்டரி எல்லைக்கோடு ஒரே மாதிரி தான் இருக்கும். ஆனால் அடிலெய்டில் அப்படி கிடையாது. ஒவ்வொரு பகுதியிலும் பவுண்டரி எல்லை மாறுபடும்.

அதனால் எங்களுடைய திட்டத்தை அதற்கு ஏற்ற மாதிரி மாற்றி விளையாட வேண்டும். இந்த ஆடுகளத்திற்கு ஏற்ற மாதிரி நாங்கள் விளையாடுவோம். சூரியகுமார் யாதவை பற்றி நான் பலமுறை பாராட்டி விட்டேன். அவருக்கு அதிரடியாகவும் சுதந்திரமாகவும் விளையாடுவது பிடிக்கும். அதற்கு நாங்கள் ஊக்கம் கொடுத்தோம். சூரிய குமாருக்கு வானமே எல்லையாக இருக்கிறது.

சூர்யகுமார் பேட்டிங் செய்யும்போது மற்ற வீரர்கள் மீது உள்ள அழுத்தத்தை அவர் குறைத்து விடுகிறார். அவருடைய ஆட்டத்தை அவர் புரிந்துகொண்டு பந்துவீச்சாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு விளையாடுகிறார். சூரியகுமார் யாதவுக்கு சிறிய மைதானங்களில் விளையாடுவது பிடிக்காது. பெரிய மைதானத்தில் விளையாடும் போது தான் ரன் ஓட வசதியாக இருக்கும் என்று அவரே என்னிடம் கூறி இருக்கிறார்.

தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பந்த் விசயத்தில் நாங்கள் இன்னும் சரியான முடிவுகளை எடுக்கவில்லை. ஏனெனில் நாங்கள் ஒரு தொடரை மட்டும் வைத்து வீரர்களுக்கு வாய்ப்பு தருவதில்லை. அதனால் நாளை என்ன நடக்கும் என இப்போதைக்கு சொல்ல முடியாது. ஆனால் அந்த கீப்பர்கள் இருவரும் நிச்சயமாக விளையாடுவார்கள்” என்று தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement