Advertisement

பந்துவீச்சாளர்கள் தான் வெற்றிக்கு காரணம் - ரோஹித் சர்மா

பந்து வீச்சாளர்களின் பெரும் முயற்சியால் வெஸ்ட் இண்டீசை குறைந்த ரன்னில் கட்டுப்படுத்த முடிந்ததாக ரோஹித் குறிப்பிட்டுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan February 17, 2022 • 11:22 AM
'Talented' Ravi Bishnoi Has A Bright Future, Says Skipper Rohit Sharma
'Talented' Ravi Bishnoi Has A Bright Future, Says Skipper Rohit Sharma (Image Source: Google)
Advertisement

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதலாவது டி20  போட்டியில் இந்திய அணி  6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டி கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. 

இந்திய அணியில் ரவி பிஷ்னோய், ஹர்சல் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் புவனேஷ் குமார், தீபக் சகார், சஹால் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதில் ரவி பிஷ்னோய் 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

Trending


இது குறித்து போட்டி நிறைவுக்கு பின்னர் பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா “பிஷ்னோய் மிகவும் திறமையான வீரர். அதனால்தான் நாங்கள் அவரை உடனடியாக அணியில் சேர்த்தோம். அவரிடம் வித்தியாசமான ஒன்றைக் காண்கிறோம். அவரிடம் நிறைய மாறுபாடுகள் மற்றும் திறமைகள் உள்ளன.

அவர் எந்த நிலையிலும் பந்துவீச முடியும், அவருக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. போட்டியை நாங்கள் சீக்கிரம் முடித்திருக்க வேண்டும், இந்த வெற்றியால் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

இந்த ஆட்டம் அதிக நம்பிக்கையை தருகிறது. பந்து வீச்சாளர்களின் பெரும் முயற்சியால் அவர்களை(வெஸ்ட் இண்டீஸ்) குறைந்த ரன்களுக்கு கட்டுப்படுத்த முடிந்தது” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement