டி10 லீக்: பரபரப்பான ஆட்டத்தில் டீம் அபுதாபி அணி த்ரில் வெற்றி!
டெல்லி புல்ஸ் அணிக்கெதிரான டி10 லீக் ஆட்டத்தில் டீம் அபுதாபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

டி10 கிரிக்கெட் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி புல்ஸ் - டீம் அபுதாபி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி புல்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 121 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ரோமெரியோ செஃபெர்ட் 39 ரன்களைச் சேர்த்தார்.
அதன்பின் இலக்கைத் துரத்திய டீம் அபுதாபி அணிக்கு பிலிப் சால்ட் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். இப்போட்டியில் அரைசதம் அடித்த பிலிப் சால்ட் 56 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன் 25, கிறிஸ் கெயில் 15 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனார். இதனால் கடைசி இரண்டு பந்துகளில் அபுதாபி அணி வெற்றிபெற கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது.
டுவைன் பிராவோ கடைசி இரண்டு பந்துகளை வீச அதனை எதிர்கொண்ட ஜெமி ஓவர்டன் அடுத்தடுத்து சிக்சர்களை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
இதன்மூலம் டீம் அபுதாபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி புல்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now