
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றதுடன், இலங்கையை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது இன்று முதல் தொடங்கவுள்ளது.
அதன்படி இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார். இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் அறிமுக வீரர் முகது ஷிராஸ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் இந்திய அணியில் ஷிவம் தூபே, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட வீரர்கள் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். முன்னதாக இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றி அசத்திய நிலையில், ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.