
கரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அதனை பிறகு வைத்து கொள்ளலாம் என்று பிசிசிஐ கூறி இருந்தது. அதற்கு ஏற்றார் போல் தற்போது அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக அடுத்த மாதம் நடைபெற இருந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகிய சுற்றுப் பயணத்தை பிசிசிஐ அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன் படி மாற்றி அமைக்கப்பட்ட புதிய அட்டவணையில் சில தொடர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாடுகிறது. அதன் பிறகு, மே மாதம் வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,. ஜூன் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 டி20 போட்டிகள் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.