
Team management must follow the process: BCCI official (Image Source: Google)
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்து அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரராக செயல்பட்டு வந்த சுப்மன் கில் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகும் சூழல் நிலவியுள்ளது.
இதனால் கில்லுக்குப் பதிலாக 2 தொடக்க வீரா்களை ‘மாற்று வீரா்கள்’ ஆக அனுப்புமாறு பயிற்சியாளா் ரவி சாஸ்திரி, கேப்டன் கோலி ஆகியோா் அடங்கிய இந்திய அணி நிா்வாகம், கடந்த ஜூன் 28ஆம் தேதி பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்திருந்தது.
முன்னதாக அவரது இடத்துக்கு அபிமன்யு ஈஸ்வரன் பரிசீலிக்கப்பட்டிருந்தாா். எனினும் அபிமன்யுவின் பேட்டிங் நுட்பங்கள் அணி நிா்வாகத்துக்கு பெரிய அளவில் நம்பிக்கை அளிக்கவில்லை என்றும், பந்துவீச்சு நிபுணா் ராகவேந்திராவின் பந்துவீச்சை அவா் எதிா்கொள்ள சிரமப்பட்டதாகவும் கூறப்படுகிறது.