
இந்தியா நடத்தும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆண்டு உலகக் கோப்பை தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து அணிகளின் கேப்டன்களின் அணி வகுப்பு நிகழ்ச்சி மட்டும் தற்போது நடைபெற்று வருகிறது.
குஜராத் கிரிக்கெட் சங்க கிளப்ஹவுஸின் கேப்டன்களின் அணிவகுப்பு நிழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில், 10 அணிகளின் கேப்டன்களும் கலந்து கொண்டுள்ளனர். அவர்களிடம் பத்திரிக்கையாளர்கள், கிரிக்கெட் வர்ணனையாளர்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதில், ரோஹித் சர்மாவிடம் பத்திரிக்கையாளர் 2019 இல் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையே கோப்பை பகிரப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்று பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரோஹித் சர்மா, அது என்னுடைய வேலை இல்லை என்பது போன்று சிரித்துக் கொண்டே பதிலளித்துள்ளார். இதையடுத்து இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லருக்கு, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அவருக்கு புரியும் படி இந்த கேள்வியை மொழி பெயர்த்துள்ளார்.