
ஐபிஎல் 15ஆவது சீசன் கிரிக்கெட் போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்தது.இதில் குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனையடுத்து இந்திய அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுடனான டி20 தொடரில் பங்கேற்கிறது.
5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடர் வரும் ஜூன் 9ஆம் தேதி முதல் ஜூன் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக 18 பேர் கொண்ட இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல்-ல் கலக்கிய வேகப்புயல் உம்ரான் மாலிக்கிற்கும் இந்த தொடரில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இதே போன்று தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியா போன்றோரும் வாய்ப்பு பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த தொடர் குறித்து தென் ஆப்பிரிக்க கேப்டன் தெம்பா பவுமா பேசியுள்ளார். அதில், “இந்திய அணிக்கு ஒரு மிகப்பெரிய பவுலிங் சொத்தாக உம்ரான் மாலிக் அமைந்துள்ளார். இந்திய அணி இதுபோன்ற வேகப்பந்துவீச்சாளர்களை கண்டறிய ஐபிஎல் பெரிதும் உதவுகிறது. ஆனால் அவரை சமாளிப்பது குறித்து யோசித்து வருகிறோம்.