Advertisement
Advertisement
Advertisement

அஸ்வினுக்கு பதில் இவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு தர வேண்டும் - கவுதம் கம்பீர்!

டி20 உலக கோப்பையில் ஸ்பின் பவுலிங் தான் இந்திய அணியின் பெரிய பிரச்னையாக இருப்பதாகவும், யுஸ்வேந்திர சாஹலை ஆடவைக்க வேண்டும் என்றும் கவுதம் கம்பீர் வலியுறுத்தியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 05, 2022 • 22:25 PM
"That is one area which is a huge concern" - Gautam Gambhir (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2ஆவது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் 3 வெற்றிகள் பதிவு நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது. குறிப்பாக ஜிம்பாப்பேவுக்கு எதிராக நடைபெறும் கடைசி போட்டியில் வென்று அரை இறுதிக்குள் நுழைய தயாராகி வரும் இந்தியா இத்தொடரில் இதுவரை செய்த தவறுகளை திருத்திக் கொள்ளவும் முயற்சிக்கவுள்ளது. 

அதிலும் அதிரடியாக தொடக்கத்தை கொடுக்க வேண்டிய கேஎல் ராகுல் – ரோஹித் சர்மா ஆகியோர் துணை கேப்டன் மற்றும் கேப்டனாக இருந்தும் பொறுப்புடன் செயல்படாமல் சொற்ப ரன்களில் அவுட்டாவது பெரிய பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. அதில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் கேஎல் ராகுல் 50 ரன்கள் குவித்தது போல் அடுத்து வரும் போட்டிகளில் ஓப்பனிங் ஜோடி அதிரடியான தொடக்கத்தை கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. அதே போல் பினிஷிங் செய்ய வேண்டிய தினேஷ் கார்த்திக் அடுத்து வரும் போட்டிகளில் கட்டாயம் சிறப்பாக செயல்பட வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 

Trending


அதை தவிர ஜஸ்பிரிட் பும்ரா இல்லாமல் தடுமாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சு துறை ஷமி, புவனேஸ்வர் குமார், அர்ஷிதீப் ஆகியோரால் வெற்றிகளில் பங்காற்றும் நிலையில் ஃபீல்டிங் துறையில் சற்று முன்னேற்றம் தேவைப்படுகிறது. எனவே 2014 முதல் தொடர்ச்சியாக நாக் அவுட் சுற்று போட்டிகளில் செய்த சொதப்பலை மீண்டும் செய்யாமல் இம்முறை சிறப்பாக செயல்படுமாறு இந்திய அணியை சுரேஷ் ரெய்னா போன்ற முன்னாள் வீரர்கள் எச்சரிக்கையுடன் கோரிக்கை வைத்து வருகிறார்கள். 

இந்நிலையில் நாக் அவுட் சுற்றுக்கு முன்பாக இந்திய அணியின் சுழல் பந்து வீச்சு துறை தான் பிரச்சனையாக இருப்பதாக தெரிவிக்கும் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் அடுத்து வரும் முக்கியமான போட்டிகள் நடைபெறும் மெல்போர்ன், சிட்னி போன்ற கிரிக்கெட் மைதானங்கள் பெரியது என்பதால் அதில் அசத்துவதற்கு அஷ்வினுக்கு பதிலாக சஹால் விளையாட வேண்டுமென கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “சுழல் பந்து வீச்சு மட்டுமே இந்திய அணியில் தற்போது நிலவும் ஒரே கவலையாகும். ஏனெனில் இந்த தொடரில் உங்களது ஸ்பின்னர்கள் பெரிய விக்கெட்டுகளை எடுக்கவில்லை. அதுதான் தற்போது பெரிய கவலையாக மாறியுள்ளது. அதிலும் அரையிறுதி சுற்றில் இங்கிலாந்து போன்ற அணிக்கு எதிராக மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றால் அது உங்களுக்கு வேதனையை கொடுத்து விடும். அந்த வகையில் இந்தியா மணிக்கட்டு ஸ்பின்னரை தவற விட்டுள்ளது.

அவர்கள் மணிக்கட்டு ஸ்பின்னரை பயன்படுத்த வேண்டும். இங்கே அஸ்வின் சற்று பேட்டிங் செய்வார் என்பதால் நீங்கள் வாய்ப்பளித்து வருகிறீர்கள். ஆனால் டாப் ஆர்டர் ரன்கள் குவிக்கவில்லை என்றால் மட்டுமே அவருடைய பேட்டிங் தேவைப்படும். எனவே மெல்போர்ன் மைதானம் பெரிது என்பதால் சஹாலை தேர்வு செய்யுங்கள். அதன் பின் சிட்னியில் நீங்கள் விளையாடுவதால் அவர் நிச்சயம் உதவுவார். ஏனெனில் சமீபத்திய போட்டிகளில் அடிலெய்ட் போன்ற பெரிய மைதானங்களில் நியூசிலாந்தின் இஷ் சோதி சிறப்பாக செயல்பட்டார். அந்த வகையில் இந்த தொடரில் மணிக்கட்டு ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் சமீபத்திய ஆசிய கோப்பை உட்பட சமீப காலங்களில் சுமாராக பந்து வீசி ஃபார்மை இழந்த சஹால் விக்கெட்களை எடுக்க தடுமாறி வரும் நிலையில் இதுவரை 3 விக்கெட்டுகளை எடுத்துள்ள அஷ்வின் முடிந்த அளவுக்கு சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். மேலும் ஆஸ்திரேலிய மைதானங்கள் பெரும்பாலும் சுழல் பந்து வீச்சுக்கு கை கொடுக்காது என்ற நிலைமையில் பேட்டிங்கில் எதுவுமே தெரியாத சஹாலை விட பாகிஸ்தான் மற்றும் வங்கதேச போட்டியில் கடைசி நேரங்களில் முக்கிய ரன்களை குவித்து வெற்றியில் முக்கிய பங்காற்றிய அஷ்வின் இந்த உலகக் கோப்பையில் தொடர்ந்து விளையாட தகுதியானவர் என்பதே நிதர்சனமாகும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement