
இந்தியா -ன்இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக துவக்க வீரர் ரோஹித் சர்மா திகழ்ந்தார். முதல் இன்னிங்சில் 11 ரன்கள் மட்டுமே அடித்து இருந்தாலும், இரண்டாவது இன்னிங்சில் 256 பந்துகளை சந்தித்து 14 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என 127 ரன்கள் குவித்து அசத்தினார்.
இந்நிலையில் போட்டி முடிந்து தான் விளையாடியது பேசிய ரோகித் சர்மா, “என்னால் எவ்வளவு நேரம் பேட்டிங் செய்ய முடியுமோ அவ்வளவு நேரம் பேட்டிங் செய்ய நினைத்தேன். அதே போன்று இந்த சதம் கிடைத்தது மிகவும் ஸ்பெஷலானது. அதுமட்டுமின்றி போட்டியின் இந்த இரண்டாவது இன்னிங்ஸ் எவ்வளவு முக்கியம் என்பதை நாங்கள் உணர்ந்து இருந்தோம்.