ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பு - பிசிசிஐ!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது ஒரு வார காலம் ஒத்திவைக்கப்படுவதாகவும், எஞ்சியுள்ள போட்டிகளுக்கான இடம் மற்றும் தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற இருந்த லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த இருந்தன. இந்நிலையில் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகின.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ஐபிஎல் தொடரில் 18ஆவது சீசனில் எஞ்சியுள்ள போட்டிகள் அனைத்தும் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது ஒரு வார காலம் ஒத்திவைக்கப்படுவதாகவும், எஞ்சியுள்ள போட்டிகளுக்கான இடம் மற்றும் தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), நடந்து வரும் ஐபில் 2025 தொடரின் எஞ்சிய போட்டிகளை உடனடியாக ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. போட்டியின் புதிய அட்டவணை மற்றும் இடங்கள் குறித்த கூடுதல் தகவல்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து, நிலைமையை விரிவாக மதிப்பிட்ட பிறகு, உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.
பெரும்பாலான உரிமையாளர்களின் பிரதிநிதித்துவங்களைத் தொடர்ந்து, அனைத்து முக்கிய பங்குதாரர்களுடனும் உரிய ஆலோசனைக்குப் பிறகு ஐபிஎல் நிர்வாகக் குழுவால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அவர்கள் தங்கள் வீரர்களின் கவலை மற்றும் உணர்வுகளையும், ஒளிபரப்பாளர், ஸ்பான்சர்கள் மற்றும் ரசிகர்களின் கருத்துக்களையும் தெரிவித்தனர். நமது ஆயுதப் படைகளின் வலிமை மற்றும் தயார்நிலையில் பிசிசிஐ முழு நம்பிக்கை வைத்திருக்கும் அதே வேளையில், அனைத்து பங்குதாரர்களின் கூட்டு நலனுக்காக செயல்படுவது விவேகமானது என்று வாரியம் கருதுகிறது.
கிரிக்கெட் ஒரு தேசிய ஆர்வமாக இருந்தாலும், தேசத்தையும் அதன் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் நமது நாட்டின் பாதுகாப்பையும் விட பெரியது எதுவுமில்லை. இந்தியாவைப் பாதுகாக்கும் அனைத்து முயற்சிகளையும் ஆதரிப்பதில் பிசிசிஐ உறுதியாக உள்ளது, மேலும் நாட்டின் நலனுக்காக அதன் முடிவுகளை எப்போதும் சீரமைப்போம். மேலும் இத்தொடாரின் முக்கிய பங்குதாரர்களின் புரிதலுக்கும் அசைக்க முடியாத ஆதரவிற்கும் நன்றி தெரிவிக்கிறது” என்று தெரிவித்துள்ளது.
Also Read: LIVE Cricket Score
முன்னதாக நேற்றைய தினம் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியில் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதேசமயம் இந்திய எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டதன் காரணமாக வீரர்கள், ரசிகர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது என்ற தகவலும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now