அணியின் மிடில் ஆர்டர் சிறப்பாக செயல்பட்டது - ஸ்டீவ் ஸ்மித்!
இரண்டு கீப்பர்களும் சிறிது காலமாக அழகாக பேட்டிங் செய்து வருகின்றனர். அவர்கள் இருவரும் சிறந்த ஃபார்மில் உள்ளனர் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் பில் சால்ட், ஜேமி ஸ்மித அகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த பென் டக்கெட் - ஜோ ரூட் இணை பொறுப்புடன் விளையாடி மூன்றாவது விக்கெட்டிற்கு 158 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதில் அரைசதம் கடந்திருந்த ஜோ ருட் 68 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அபாரமாக விளையாடிய பென் டக்கெட் சதமடித்து அசத்தினார். இப்போட்டியில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த பென் டக்கெட் 143 பந்துகளில் 17 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 165 ரன்களைக் குவித்து விக்கெட்டை இழந்தார்.
Also Read
அதேசமயம் மற்ற வீரர்களில் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்காததால் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் துவார்ஷூயிஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியிலும் டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, மேத்யூ ஷார்ட் 63, மார்னஸ் லபுஷாக்னே 47 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஜோஷ் இங்கிலில்ஸ் - அலெக்ஸ் கேரி இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அலெக்ஸ் கேரி 69 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்கால் இருந்த ஜோஷ் இங்கிலிஸ் 120 ரன்களையும், கிளென் மேக்ஸ்வெல் 32 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 47.3 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், “இப்போட்டியின் ஆரம்பத்திலிருந்தே வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள் என்று நினைக்கிறேன். மேத்யூ ஷார்ட் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடினார். டிராவிஸும் நானும் மட்டுமே சோபிக்க தவறினோம். ஆனால் எங்கள் அணியின் மிடில் ஆர்டர் சிறப்பாக செயல்பட்டது. உண்மையிலேயே இது மகிழ்ச்சியளிக்கிறது.
இதுபோன்ற சூழலில் நங்கள் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதையே விரும்பினோம். ஏனெனில் இறுதியில் பேட்டிங் செய்வது எளிதாக இருந்தது. முதல் இன்னிங்ஸில் இறுதியில் வேகம் குறைந்தது, 350 ரன்களை துரத்த முடியும் என்று நினைத்தேன். ஒரு கணம் அவர்கள் 400 ரன்களுக்கு மேல் எடுப்பார்கள் என்று தோன்றியது. அனாவல் அவர்களை கட்டுப்படுத்தியதில் நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். அதேசமயம் 50 ஓவர்கள் பேட் செய்தால் இந்த இலக்கை துரத்த முடியும் என்பது எங்களுக்குத் தெரியும்.
Also Read: Funding To Save Test Cricket
ஒருவருக்கொருவர் தங்களின் திறமைகளை நம்பி, மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். இரண்டு கீப்பர்களும் சிறிது காலமாக அழகாக பேட்டிங் செய்து வருகின்றனர். அவர்கள் இருவரும் சிறந்த ஃபார்மில் உள்ளனர். ஜோஷ் பந்தை மைதானம் முழுவதும் அடிக்கிறார், எல்லா ஷாட்களையும் பயன்படுத்துகிறார். இங்கிலிஸின் அற்புதமான முயற்சி இது, அலெக்ஸும் சிறப்பாக விளையாடினார். அணியின் வெற்றியில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now