Advertisement
Advertisement
Advertisement

ENG vs IND: விராட் கோலிக்கு ஆதரவாக ட்வீட் செய்த பாபர் ஆசாம்!

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சொற்ப ரன்னுக்கு பெவிலியன் திரும்பிய விராட் கோலிக்கு பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் ஆறுதல் கூறியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan July 15, 2022 • 11:46 AM
This too shall pass. Stay strong: Babar Azam's message to Virat Kohli
This too shall pass. Stay strong: Babar Azam's message to Virat Kohli (Image Source: Google)
Advertisement

ஒருகாலத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தவர் விராட் கோலி. இந்தியா தோற்றுவிடும் என உறுதியாக நம்பப்பட்ட பல போட்டிகளை தனது அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெறச் செய்திருக்கிறார் விராட். இவ்வாறு இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்கி வந்த விராட் கோலி சமீபகாலமாக அவுட் ஆப் ஃபார்மில் இருக்கிறார். 

மைதானத்துக்கு வருவதும், சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்புவதும் விராட் கோலியின் வாடிக்கையாக மாறிவிட்டது. உதாரணமாக, அவர் சதம் அடித்தே மூன்றாண்டுகள் ஆகின்றன என்ற விமர்சனம் அவர் மீது தொடர்ச்சியாக வைக்கப்பட்டு வருகிறது. கடைசியாக, வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் தான் அவர் சதம் அடித்திருந்தார்.

Trending


சதம் கூட வேண்டாம் அரை சதமாவது அடித்தாரா என்றால், அண்மைக்காலமாக அதுவும் இல்லை. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அவரை கடுமையாக கிண்டல் செய்தும், வசைப்பாடியும் வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து கோலியை நீக்க வேண்டுமென முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து கூறும் அளவுக்கு மோசமான ஃபார்மில் அவர் இருக்கிறார். அவரும் எவ்வளவு முயன்று பார்த்தாலும், பழைய ஃபார்முக்கு அவரால் வரவே முடியவில்லை.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை நடைபெற்ற அனைத்து ஆட்டங்களிலும் விராட் கோலி சொற்ப ரன்களையே எடுத்துள்ளார். குறிப்பாக, நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 25 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 16 ரன்களை மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார் கோலி.

இதனால் விராட் கோலிக்கு எதிரான கடும் விமர்சனங்கள் சமூக வலைதளங்களை நேற்று ஆக்கிரமித்தன. மேலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசமுடன் கோலியை ஒப்பிட்டு ரசிகர்கள் அவரை கிண்டல் செய்து வந்தனர்.

இந்த சூழலில், தனது ட்விட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் இன்று ஒரு பதிவை வெளியிட்டார். அதில் கோலியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த அவர், அதற்கு மேலே "இதுவும் கடந்து போகும். தைரியமாக இருங்கள் விராட்" என எழுதியுள்ளார். இந்தப் பதிவு தற்போது இணையாத்தில் வைரலாகி வருகிறது.
 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement