Advertisement

ENG vs IND, 1st T20I: ஒரு சறுக்கலை சந்தித்தாலும் நாங்கள் பலமாக திரும்பவும் - ஜோஸ் பட்லர்!

புதுப்பந்தில் இந்திய வீரர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசி எங்களை போட்டியின் ஆரம்பத்திலேயே அழுத்தத்திற்குள் கொண்டு வந்துவிட்டனர் என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan July 08, 2022 • 13:24 PM
Thought India bowled fantastically well with the new ball: Jos Buttler
Thought India bowled fantastically well with the new ball: Jos Buttler (Image Source: Google)
Advertisement

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி நேற்று சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெடுகளை இழந்து 198 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக பேட்டிங்கில் அனைவரும் அசத்த 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. சமீப காலமாகவே டி20 போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணியானது இந்த சேசிங்கை கடினமாக கொண்டு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்திய அணி பந்துவீச்சாளர்களின் அபார பவுலிங்கை தாக்கு பிடிக்க முடியாமல் 20 ஓவர்களை கூட முழுவதுமாக பேட்டிங் செய்யாமல் 19.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழுந்து 148 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Trending


இந்திய அணி சார்பாக இந்த போட்டியில் ஆல் ரவுண்டர் ஹார்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளையும், சுழற்பந்துவீச்சாளர் சாஹல் 2 விக்கெட்களையும், அறிமுக வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும்போது 33 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 51 ரன்கள் குவித்த ஹர்திக் பாண்டியா பந்து வீச்சிலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வானார். மொத்தத்தில் இந்த போட்டியில் இளம் வீரர்களைக் கொண்டே இந்திய அணி விளையாடியிருந்தாலும் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை எளிதில் வீழ்த்தியது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர், “புதுப்பந்தில் இந்திய வீரர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசி எங்களை போட்டியின் ஆரம்பத்திலேயே அழுத்தத்திற்குள் கொண்டு வந்துவிட்டனர். அதன் பின்பு எந்த ஒரு கட்டத்திலும் எங்களால் இந்திய அணியை தாண்டி செல்ல முடியவில்லை. நாங்கள் பந்து வீசும் போது கூட முதல் பாதியில் ரன்கள் அதிகம் கசிந்தாலும் இரண்டாவது பாதியில் சிறப்பாக ரன்களை கட்டுப்படுத்தி விட்டோம்.

ஆனாலும் இலக்கு நாங்கள் எதிர்பார்த்ததை விட சற்று அதிகமாக இருந்தது. புவனேஸ்வர் குமார் இந்த போட்டியின் ஆரம்பத்திலேயே எங்களை வீழ்த்தி விட்டார் என்று கூறவேண்டும். ஏனெனில் அவரால் எந்த ஒரு சூழ்நிலையிலும் பந்தை ஸ்விங் செய்ய முடிகிறது. அவர் போட்டியின் துவக்கத்திலேயே பந்தினை அதிக அளவு ஸ்விங் செய்யும் போது தான் இது எனக்கு டி20 போட்டி என்று தெரியவந்தது.

அவரின் அபாரமான பந்துவீச்சு போட்டியின் துவக்கத்திலேயே எங்களுக்கு பின்னடைவை தந்தது இருந்தாலும் எங்களது அணியில் உள்ள வீரர்கள் திறமை வாய்ந்த வீரர்கள் நிச்சயம் இது போன்ற பெரிய போட்டிகளில் ஒரு சறுக்கலை சந்தித்தாலும் நாங்கள் பலமாக திரும்பவும்” என தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement