
ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 டி20 போட்டிகளிலும் வெற்றிபெற்றதுடன், 5-0 என்ற கணக்கில் விண்டீஸை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது.
இந்நிலையில் இத்தொடரின் போது ஆஸ்திரேலிய அணி வீரர் டிம் டேவிட் ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா இடையேயான 5வது டி20 போட்டியின் போது ஆஸ்திரேலியாவின் டிம் டேவிட் கள நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஆஸ்திரேலிய இன்னிங்ஸின் ஐந்தாவது ஓவரில் நடந்தது.
அப்போது வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப் லெக் திசையில் விசிய பந்திற்கு கள நடுவர் வைட் கொடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த டிம் டேவிட், தனது கைகளை விரித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கள நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு அல்லது அதிருப்தியை வெளிப்படுத்துவது ஐசிசி நடத்தை விதிகள் பிரிவு 2.8 படி குற்றமாகும்.