
நியூசிலாந்து டெஸ்ட் அணி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் நியூசிலாந்து அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இந்திய அணியை அதன் சொந்த மண்ணிலேயே 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்தும் சாதனை படைத்துள்ளது.
இதையடுத்து நியூசிலாந்து அணி அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது நவம்பர் 28ஆம் தேதி கிறிஸ்ட்சர்ஜிலும், இரண்டாவது போட்டி டிசம்பர் 06ஆம் தேதி வெல்லிங்டனிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி ஹாமில்டனிலும் நடைபெறவுள்ளது. மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இத்தொடருக்கான நியூசிலாந்து அணியின் இடம்பிடித்துள்ள அனுபவ வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீ, தனது ஓய்வு முடிவு குறித்து மனம் திறந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நான் சிறு வயதில் இருந்தே நியூசிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்ற கனவுடன் தான் வளர்ந்தேன்.அந்தவகையில் 18 ஆண்டுகளாக நியூசிலாந்து அணிக்காக விளையாடுவது எனக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய கவுரவம் மற்றும் பாக்கியம். ஆனால் தற்சமயம் இந்த விளையாட்டில் இருந்து விலகுவதற்கான நேரம் சரியானது.