
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மதுரை அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நெல்லை அணிக்கு அருண் கார்த்திக் - சூர்யபிரகாஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சூர்யபிரகாஷ் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான அருண் கார்த்திக்கும் 18 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த அஜித்தேஷ் குருஸ்வாமி - நிதிஷ் ராஜகோபால் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். அதன்பின் அரைசதம் கடந்த கையோடு குருஸ்வாமி 50 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.