Ajitesh guruswamy
டிஎன்பிஎல் 2023: ஆரஞ்சு & பர்பிள் தொப்பியை தட்டிச்சென்ற ஷாருக், அஜித்தேஷ்!
தமிழ்நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற லைகா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் விளையாடிய கோவை கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. சுரேஷ் குமார், அதீக் ரஹ்மான், முகேஷ் அரை சதமடித்தனர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய நெல்லை அணி 101 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 104 ரன் வித்தியாசத்தில் கோவை அணி அபார வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் லைகா கோவை கிங்ஸ் அணி தொடர்ந்து 2ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.