
தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் இன்றுடன் நிறைவடைந்தது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கோவை அணிக்கு சுஜய் மற்றும் சுரேஷ் குமார் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சுஜய் 7 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சச்சினும் 12 ரன்கள் எடுத்த நிலையில் சந்தீப் வாரியர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் இணைந்த சுரேஷ் குமார் - முகிலேஷ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சுரேஷ் குமார் அரைசதம் கடந்தார். பின் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 57 ரன்களைச் சேர்த்திருந்த சுரேஷ் குமாரின் விக்கெட்டை சோனு யாதவ் கைப்பற்றினார்.