Advertisement
Advertisement
Advertisement

TNPL 2024: இந்திரஜித் அபார ஆட்டம்; கோவை கிங்ஸின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த திண்டுக்கல் டிராகன்ஸ்!

Tamil Nadu Premier League 2024: லைகா கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

Advertisement
TNPL 2024: இந்திரஜித் அபார ஆட்டம்; கோவை கிங்ஸின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த திண்டுக்கல் ட
TNPL 2024: இந்திரஜித் அபார ஆட்டம்; கோவை கிங்ஸின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த திண்டுக்கல் ட (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 21, 2024 • 08:54 PM

விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ் அணிக்கு தொடக்க சிறப்பாக அமையவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சுஜய் 8 ரன்களிலும், சுரேஷ் குமார் 3 ரன்களிலும், முகிலேஷ் 5 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் அந்த அணி 26 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
July 21, 2024 • 08:54 PM

பின்னர் இணைந்த சய் சுதர்ஷன் - ராம் அரவிந்த் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதன்பின் 25 ரன்களில் ராம் அரவிந்த் விக்கெட்டை இழக்க, நிதானமாக விளையாடிய சாய் சுதர்ஷனும் 33 ரன்களில் நடையைக் கட்டினார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாருக் கான் - அதீக் உர் ரஹ்மான் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் அபாரமாக விளையாடிய ஷாருக் கான் 25 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். 

Trending

மேலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷாருக் கான் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 51 ரன்களையும், அதீக் உர் ரஹ்மான் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 29 ரன்களைச் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் லைகா கோவை கிங்ஸ் அணியானது 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களைச் சேர்த்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் தொடக்க வீரர் விமல் குமார் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் களமிறங்கிய பாபா இந்திரஜித் அதிரடியாக விளையாட, அவருக்கு துணையாக ஷிவம் சிங்கும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் அதிரடி காட்டிய பாபா இந்திரஜித் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். மறுபுறம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் சிங் 36 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய பூபதி குமார் ரன்கள் ஏதுமின்றியும், சரத் குமார் 20 ரன்களுக்கும், கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்திரஜித் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 11 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 96 ரன்களைக் குவித்தார். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இதன்மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியானது 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதன்மூலம் நடப்பு டிஎன்பிஎல் லைகா கோவை கிங்ஸ் அணி முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது. மேற்கொண்டு இப்போட்டியில் அபாரமாக விளையாடிய பாபா அபாரஜித் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement