
இன்றைய டாப் 5 கிரிக்கெட் செய்திகள்: ஆகஸ்ட் 12, 2025 அன்று கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற சில் முக்கிய நிகழ்வுகளை அறிந்துகொள்ள சிறந்த 5 கிரிக்கெட் செய்திகளை இப்பதிவில் பார்ப்போம்.
1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களைச் சேர்த்த நிலையில், இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
2. ஐசிசியின் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இந்திய டெஸ்ட் அணி கேப்டன் சுப்மன் கில்லும், சிறந்த வீராங்கனை விருதை இங்கிலாந்தின் சோஃபியா டங்க்லியும் வென்றுள்ளனர். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அபாரமாக செயல்பட்டு ரன்களைக் குவித்ததுடன், தொடர் நாயகன் விருதையும் வென்றதன் காரணமாக அவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த தொடரில் அதிக ரன்களைக் குவித்த இங்கிலாந்து வீராங்கனையாகவும் இருந்துள்ளார்.