
இன்றைய டாப் 5 கிரிக்கெட் செய்திகள்: ஆகஸ்ட் 18, 2025 அன்று கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற சில் முக்கிய நிகழ்வுகளை அறிந்துகொள்ள சிறந்த 5 கிரிக்கெட் செய்திகளை இப்பதிவில் பார்ப்போம்.
1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் தென்னாப்பிரிக்க அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளார் குவேனா மகாபா சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் டி20 தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவால்ட் பிரீவிஸ், முதல் ஒருநாள் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்குவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2. ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி நாளை தினம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு அணியில் இடம் கொடுக்க வேண்டும் என முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் அபிஷேக் சர்மாவுடன் வைபவ் சூர்யவன்ஷியை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.