
நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்த இந்தியா ஏழு போட்டிகளில் விளையாடி ஏழிலும் வெற்றிவாகை சூடியுள்ளது. இந்த சூழலில் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து கணுக்காலில் ஏற்பட்ட காயம் குணமாகாததால் ஹர்திக் பாண்டியா அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய பாண்டியா வங்கதேச அணியுடனான மூன்றாவது போட்டியில் பந்துவீசும் போது கணும்காலில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் காயத்தால் மைதானத்தில் இருந்து ஹர்திக் பாண்டியா பாதியிலேயே வெளியேறினார். அடுத்தடுத்த போட்டிகளில் பாண்டியாவிற்கு பதிலாக சூர்யகுமார் அணியில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் காயம் தொடர்ந்து அச்சுருத்திவருவதாக ஹர்திக் பாண்டியா தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார். அதற்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா இந்திய அணியின் சேர்க்கப்பட்டுள்ளார்.